திங்கள் கிழமை காலையில் கல்லூரி வாசலில் வினய்யின்
வருகைக்காக காத்திருந்தான் அகஸ்டீன். காலையிலிருந்து இரண்டொரு முறை போனில்
பேசினாலும் தங்கள் காதலை வெளி படுத்திய பின்னர் நடக்க போகும் முதல் சந்திப்பு
என்பதால் மிகவும் ஆவலுடன் காத்திருந்தான் அகஸ்டீன். எதிர் பார்த்த படியே வந்த
வினய் அகஸ்டீனை பார்த்து கண் அடித்த வாறே வண்டியை அதற்கென்று ஒதுக்க பட்ட இடத்தில்
சென்று நிறுத்தி விட்டு வந்தான். வண்டியை நிறுத்தி விட்டு வந்த வினய் நேராக அகஸ்டீனை
கட்டி பிடிப்பது போல நெருங்கவே......
”ஹலோ ஹலோ இது ஒன்னும் பீச்
இல்ல சார்....... காலேஜ் கொஞ்சம் அடக்கியே வாசிங்க” என்றான்.
என்ன டார்லிங் நேத்துலேர்ந்து எப்ப உன்ன பாக்கபோறனு
நெனச்சிட்டே இருந்தன் வந்ததும் இப்படி சொல்ற....?
ம்ம்..... அதுவும் சரிதான் அதுக்காக
இப்புடியா.....? என்று கேட்டு கொண்டே அவனை கையை பற்றி உள்ளே கூட்டி சென்றான்.
சரி அகஸ்குட்டி எப்ப நம்ம வீட்டுக்கு வர போறீங்க..
இப்பவாவது சொல்லுங்க.......சொல்லுங்க..
அப்பப்பா......!!! காலைலருந்து இதே கேள்விய எத்தன
தடவ கேப்ப.....? காதே புளிச்சுடும் போல.
அவங்கவங்க வேதனை அவங்களுக்குதான் தெரியும் உன்ன
கட்டி புடிச்சுகிட்டு நைட் பூரா தூங்கனும்... உன் கூட ஊரெல்லாம் சுத்தணும்
உனக்கும் எனக்கும் காத்து கூட இடையில புகாத அளவுக்கு நாம ரெண்டு பேரும் இருக்கணும்டா
அதான் அடிக்கடி கேக்குறன் சொல்லுடா.......!!!
இதையெல்லாம் கேட்ட அகஸ்டீன் உண்மையிலேயே
தடுமாறித்தான் போனான். அவன் கண்கள் கலங்காத குறையாக வினய்யிடம்........
வினு.. இவ்ளோ நாளா எங்கருந்தடா.....எனக்காக இவ்ளோ
ஏங்குற ஒரு ஜீவன் இந்த உலகத்துல இருக்காடா....... தண்ணி இல்லாத பாலைவனம் மாறி
வத்தி போயிருந்த என் வாழ்க்கையில தூரத்துல தெரியிற நீரூற்று போல வந்துருக்கடா.....
அது கானல் நீரா மாறிட கூடாதுடா....... என் கூடவே கடைசி வரை இருப்பியாடா......
என்று கேட்டான்
கலகலவென்று இருந்த வினய் அகஸ்டினின் வார்த்தைகளை
கேட்டு....
ஹேய் லூசு.... என்ன காலையிலேயே எழுதி மனப்பாடம்
பண்ணிட்டு வந்துட்டியா.........? என்று சிரித்தபடி தொடர்ந்தான் “இனிமேல் எனக்கு
எல்லாம் நீதாண்டா. உன் மேல உயிரையே வெச்சுருக்கண்டா..... உன்ன யாருக்கும் விட்டு
குடுக்க மாட்டண்டா. உன்ன எப்ப மொதல்ல பாத்தனோ அப்பவே முடிவு பண்ணிடண்டா. இனிமேல்
இப்படி கேக்காத அகஸ் உயிர் போற மாதிரி இருக்கு. என்று அவன் கூறி கொண்டே இருக்கும்
போதே அவனை பற்றி இருந்த அகஸ்டினின் கை மேலும் இறுகியது.
இது போதும்டா.. என்னால இன்னும் கூட நம்ப
முடிலடா........ போன வாரம் முழுக்க உன்ன நெனெச்சு ஏங்கிட்டு இருந்தன் ஆனா இப்ப
நான் எதிர்பாக்காதது லாம் நடக்குதுடா..... தேங்க்ஸ் வினு”. என்று அவர்கள் பேசி கொண்டே வருவதற்கும்
இன்ஸ்ட்ருமென்ட் துறை கட்டிடம் வரவும் சரியாக இருந்தது.
என்னடா இது நேத்துலாம் ரோட்லருந்து
டிப்பார்ட்மென்ட் கு இவ்ளோ தூரம் இருக்கேன்னு கடுப்பா இருந்தது இன்னைக்கு சடார்னு
வந்துட்டு.....? என்று அலுத்து கொண்டான் வினய்.
“ஆமா... ஆமா.... ரொம்பதான் பண்ணாத..... கிளாஸ்க்கு
போ மதியம் சாப்பிடும் போது பாக்கலாம்”
ம்ஹும்...ம்ஹும்
அகஸ்..... கண்டிப்பா கிளாஸ்க்கு போகனுமா வாயேன் இன்னைக்கு லீவ் போட்டு வெளில
போய்ட்டு வரலாம்.... என்று சிணுங்கினான் வினய்.
அய்யே.....!!
ரொம்ப கொஞ்சாத.... அதுலாம் அப்புறம் பாக்கலாம் இப்ப கெளம்பு கிளாஸ்க்கு டைம்
ஆகுது..
“ம்ம்ம்ம் சரி
கெளம்பு நானும் போறன் ஆனா அடுத்ததடவலாம் கேட்டு கிட்டு இருக்க மாட்டேன் வரலைனா
தூக்கிகிட்டு போய்ட்டே இருப்பன் சொல்லிட்டன்”.... என்று
கூறிவிட்டு கிளம்பவும்;வினய்.. வினய்....... வைட்! வைட்!! என்று ஒரு குரல்
கேக்கவும் சரியாக இருந்தது.
சட்டென்று
இருவரும் திரும்பி பார்த்த போது அங்கு ஹரீஷ் ஓடி வந்து கொண்டிருந்தான். அதை
பார்த்ததும் வினையின் முகம் சிரிக்கவும் அகஸ்ஸின் முகம் சுருங்கவும் தொடங்கியது. அதற்குள்
அவன் அருகில் வந்து இறைக்க இறைக்க பேச தொடங்கினான்.
ஹாய்... வினய் வா
சேந்து போலாம்.... உன்ன அங்கேயே பாத்துட்டன் ஒரு பிரன்ட் கிட்ட பேசிகிட்டு
இருந்தன் அதான் லேட்டு போலாமா..... ? என்று அகஸ்டீன் நிற்பதை கவனிக்காதது போல ஏன்.?
அவனை அதற்கு முன் தெரியவே தெரியாதது போலவும் கேட்டான்
போலாம்டா......
ஓகே.. அகஸ் நாம மதியம்.... ஹேய் ஹரீஷ்
இவன்தான் அகஸ்டீன் நான் அன்னைக்கு சொன்னன்ல....
ஹோ.... நீதானா
அது. ம்ம்
என்னடா உனக்கு
ஏற்கனவே இவன தெரியுமா.....?
அதுசரி தம்பி
நீங்க இப்பதானே வந்துருக்கிங்க..... நாங்கலாம் போன வருஷம் ஒன்னதான் படிச்சோம்
என்று மிதப்புடன் பேசினான். அகஸ்டீனுக்கு அப்படியே பற்றி கொண்டு வந்தது.
இருந்தாலும் அடக்கி கொண்டு... “ஆமா வினய் நாங்கலாம் பர்ஸ்ட் இயர்ல ஒரே
கிளாஸ்தான்..... என்று கூறினான்.
ஒஹ்.. நானா தான்
செம பல்பு வாங்கிட்டனா.....? சரிடா வா போலாம் என்று
அகஸ்டீனை பார்த்து கண்ணடித்து விட்டு ஹரீஷின் தோள் மீது கையை போட்டு அழைத்து
சென்றான் வினய்.....
மெல்ல நகர்ந்த
அகஸ்டீன் வினய் அவனை திரும்பி பார்ப்பான் என்று இரண்டொரு முறை நின்று பார்த்தான்
ஆனால் வினய்யோ ஹரீஷிடம் சுவாரஸ்யமாக பேசியபடி கட்டிடத்தின் உள்ளே சென்று
மறைந்தான்.
ச்சே. மரமண்ட
மரமண்ட..... சரியான மரமண்டையா இருக்கும் போலேயே இதுக்குலாம் லவ் ஒரு கேடு....
அப்படியே போறான்..... ஏன் கொஞ்சம் திரும்பித்தான் பாத்தா என்ன.? அந்த குள்ள நரி
வேற கூடயே போவுது.... ஆண்டவா...... நான் எப்டிதான் சமாளிக்க போறனோ..? ஆமா சிலம்பு
இந்நேரம் வந்திருப்பானே...? என்று நினைத்தவாறே அவனை தொடர்பு கொள்ளும் நோக்கில்
பாக்கெட்டில் பதுங்கி இருந்த மொபைலுக்கு விடுதலை அளித்து வெளியே எடுக்கவும்....
அதிர்வு நிலையில் வைக்க பட்டிருந்த அது ஒன் மெசேஜ் ரிசீவ்ட் பிரம் என் இதயம் என்று
அதிரவும் சரியாக இருந்தது. ஆம் வினய்யின் என்னை இந்த பெயரில்தான் அகஸ்டீன்
சேமித்திருக்கிறான் ஆவலுடன் அதனை திறந்தான்...... அகஸ்.
“மிஸ் யூ சோ மச்டா
குட்டி. மதியம் எப்ப வரும் னு காத்திருக்கேன்” என்று இருந்தது.
நிலை கொள்ளாமல்
தவித்த அகஸ்டீன் உடனே “ஐ டூ மிஸ் யூ டா நானும் வைட் பண்றன்” என்று ரிப்ளை
செய்தான்...... பின்னர் அவனும் வகுப்புக்கு சென்றான் சிறிது நேரம் கழித்து
சிலம்புவும் வந்தான். அக்கா நிச்சயத்தில் இருந்த வேளை பளு காரணமாகவும் இதர பல வேலைகள்
காரணமாகவும் சிலம்புவிற்கு அகஸ்டினின்
நினைவே வரவில்லை. இவனுக்கோ வினய்யின் நாபகத்தால் சிலம்புவின் நினைவே
வரவில்லை. இன்றுதான் இருவரும் சந்திக்க போவதால் சனிகிழமைஇலிருந்து இன்றுகாலை வரை
நடந்த அனைத்து சம்பவங்களும் மூச்சு விடாமல் சில்ம்புவிடம் கூறிமுடித்தான்
அகஸ்டீன். இதையெல்லாம் கேட்டு வாய் பிளந்த சிலம்புவை சுய நினைவிற்கு கொண்டு வந்து
வகுப்பிற்கு அழைத்து சென்றான் அகஸ்டீன். இடையிடையில் சிலம்புவின் கிண்டல்
கேலிகளுக்கும் பஞ்சம் இல்லை. இனிதே
வகுப்புகள் தொடங்கியது......
நாடாளும்
மன்னனாயிருந்தாலும் நாளை பிறக்க போகும் மகவாயிருந்தலும் காலம் என்பது யாருக்காகவும்
வேகமாகவும் செல்லாது,மெதுவாகவும் செல்லாது. காசநோயளிகளுக்கு கூட பனிரெண்டு மணிநேர
இரவு கொஞ்சம் சீக்கிரம் கழிந்து விடும் போல. ஆனால் இங்கு காதல் நோய் கண்ட
அகஸ்க்கும, வினய்க்கும் அந்த நான்கு மணி நேர இடைவெளியும் நான்கு யுகமாக கழிந்தது. கல்லூரி
என்பது கலைமகளின் கோயிலாக இருக்கலாம். ஆனால் வினய்யை தனக்கு முதலில் காட்டிய
கேண்டீன் அகஸ்க்கு காதல் கோயிலாக தான் தெரிந்தது. அந்த கோயிலின் மாடத்தில் அடைய
இந்த காதல் புறாக்கள் இரண்டும் மதிய உணவு இடைவேளையில் சந்திக்க ஓடோடி வந்தது.
எப்போதும்
வினய்யின் வருகைக்காக அகஸ்டீன் காத்திருப்பான் இன்றோ அகஸ்டீன் எப்பொழுது வருவான்
என்று வினய் காத்திருந்தான். மதிய உணவு இடைவேளைக்கான மணி ஒலித்து முழுதாக இன்னும்
ஒரு நிமிடம் கூட முடிந்திருக்காது. அதற்குள் வந்து விட்ட வினய் மனதிற்குள்
“ம்ஹும்.பெல்
அடிச்சு எவ்ளோ நேரம் ஆகுது இன்னும் இந்த பன்னிய காணும் பாரு. கொஞ்சம் கூட
உணர்ச்சியே கெடயாது போல இவனுக்கு நாமதான் கெடந்து தவிக்கிறோம் வரட்டும் அவன்ட்ட
பேசக்கூடாது அவனா பேசட்டும்”. என்று நினைப்பதற்குள் அகஸ் வரவே பட்டென்று இரண்டு
வரிகளுக்கு முன் அவன் மனதிற்குள் போட்ட திட்டத்தை மறந்து அகஸ்டீனை நோக்கி
சென்று......
“எவ்ளோ நேரம் வைட்
பண்றது.......இவ்ளோ லேட்டா. வர.....” என்று கேட்டான்
அடப்பாவி
இப்பதானடா பெல் அடிச்சுது இது உனக்கே ஓவரா தெரியலையா.......?
சரி விடு...! எங்க
உன் பேக்லாம் காணும்,?
ஏன்டா பேக்.. ?
“ம்க்கும்.
வெளங்கிடும் போய் உன் பேக்லாம் எடுத்துட்டு வந்துடு நாம வெளில போறோம். அப்டியே
ஹோட்டல்ல சாப்டுக்கலாம்,”
என்ன திடீர்னு....
சொல்ற......? மதியம் ஒரு டெஸ்ட் இருக்கே....!!
அய்ய அவனா நீ,,,,,
மூஞ்ச பாருங்கடா இப்ப கெளம்பி வரியா...... இல்ல காலைல சொன்னமாதிரி தூக்கிட்டு
போகவா......?
ஏதேது!! நீ செஞ்சாலும்
செய்வ போலேயே...... சரி வைட் பண்ணு வறேன். என்று உள்ளுற இருக்கும் ஆனந்தத்தை
காட்டிகொள்ளாமல் சென்றான்..... அதற்குள் வகுப்பிலிருந்து எதிரே வரும் சிலம்புவை
பார்த்து....
“டே சிலம்பு நாங்க
ரெண்டு பேரும் வெளியே போரம்டா....
ரெண்டு
பேருனா....? யாருடா...? ஹோ உங்க அவங்களா......? சரி சரி பாத்து பத்திரமா போய்ட்டு
வா...... போனதும் வேலைய ஆரம்பிச்சு வயித்துல வாங்கிட்டு வந்து நின்னுடாத அப்புறம்
தஞ்சாவுர்க்குதான் போகணும் அவங்க அப்பா கிட்ட நியாயம் கேக்க.
“ச்சீ ஓடு.......
உனக்கு எப்ப பாத்தாலும் இதே வேலைதானா, எருமைமாடு.... நான் போய் பேக் எடுத்துகிட்டு
கெளம்புறன்”..... என்று சென்றவனை கையை பிடித்து ஒரு நிமிஷம் அகஸ் என்று
நிறுத்தினான் சிலம்பு
என்னடா...
?
சொல்றனேன்னு தப்பா
நெனைக்காதடா.... ஹே சொல்லுடா என்ன விஷயம்.....?
இல்ல மாமா இப்பதான
உங்க லவ் ஸ்டார்ட் ஆகிருக்கு அதுனால செக்ஸ்லாம் கொஞ்ச நாள் தள்ளி வச்சுடுடா.
மொதல்ல அவன் உன்ன உண்மையா நேசிக்கிறானானு உறுதி படுத்தின பிறகு அதுலாம் பாத்துகாடா
ஒருவேளை அவன் உன்ன உன் உடம்புக்காக விரும்புனான இந்த இடைவெளியே அவனை காட்டி குடுத்துடும்
அதான் சொல்றன்....
சரிடா நீ
சொல்றததான் நானும் நெனசிருந்தண்டா.. தேங்க்ஸ்டா மாமா.
“ஓகேடா....... நீ
கெளம்பு நைட் என்ன நடந்துதுன்னு போன் பண்ணி சொல்லுடா.....” என்று கூறி
அகன்றான்......
அட...!!! இந்த
சிலம்பு பயலுக்குதான் நம்ம மேல எவ்ளோ அக்கறை.... என்று சிலாகித்தவாறே வகுப்பறைக்கு
சென்று தன உடமைகளை எடுத்து கொண்டு கிளம்பினான்.
அன்று
நன்னிலத்திற்கு வினய் வண்டியில் செல்லும் பொது இருந்த ஒரு அந்நிய உணர்வு இன்று
இருவரிடமும் இல்லை அந்த அளவுக்கு நெருக்கமாக இருவரும் வண்டியில் சென்று கொண்டு
இருந்தனர்.
“ஒன்னும் இல்லாத
இடத்துல கூட ஏன்தான் இப்படி நச் நச் னு ப்ரேக் போடுவியோ தெரியாது.....?
“ஆமா உனக்கு ஒன்னும்
தெரியாதுதான் அன்னைக்கு மழைல நனஞ்சப்ப மட்டும் அப்படி கட்டி புடிச்ச....? ஏன்....?
இப்ப புடிக்கிரது.....?
“ஆமா நாங்க
தானாதான புடிச்சோம். நீ தானடா கெஞ்சின.....?
“அதுனாலதான்
புடிக்காத மாறி கட்டி புடிச்சியாக்கும். அன்னைக்கு இருந்த மூடுக்கு உன்ன அப்பவே
ரேப் பண்ணிருக்கணும் விட்டதுதான் இப்ப தப்பா போகுது.”
இதைகேட்ட அகஸ்க்கு
ஓரே வெக்கமாக போய் விட்டது. “ஏன்தான் இப்படி பச்சயா பேசுறியோ..... அதுசரி இப்ப நாம
எங்க போறோம்....?
“இப்பவாவது கேட்டியே.....!!!
மொதல்ல மாயரத்துல போய் நல்ல ஹோட்டலா பாத்து ஒரு புடி புடிச்சுட்டு நேரா வீட்டுக்கு
போய் தனியா இன்னைய பொழுத கழிக்க போறோம்.....
“நான் சாயந்தரம்
வேலைக்கு போகணுமே.......?
“சாயந்தரம் தான
அதுக்கு இப்ப என்ன நானே கொண்டு வந்து விடுரண்டா..”.
“சரி சரி ஹோட்டல்ல
தான் போய் சாப்பிடுனுமா.....?
“ஏன் வேற எங்க
போகணும்னு சொல்ற....?
“இல்ல..... சப்பாட
வாங்கிட்டு போய் வீட்லயே சாப்ட்டா என்ன.....?
“பார்ரா....
உனக்கும் கொஞ்சம் கிரைன் இருக்கு போல..... எனக்கு இது தோணவே இல்லையே......!!!
என்று பல கதைகளை
பேசிக்கொண்டே சாப்பாடு வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தனர் “சரி உள்ள தண்ணி
இருக்கும் போய் கை கழுவிட்டு ஜக் ல எடுத்துகிட்டு வா அகஸ் நான் சாப்பாடு பிரிச்சு
வைக்கிறேன்” என்று வினய் கூறினான்..
“உள்ளே சென்று
திரும்பிய அகஸ்க்கு ஆச்சர்யமாக இருந்தது. சாப்பாட்டு இல்லை அழகாக விறித்து விட்டு.
கவரில் கட்டி இருந்த குழம்பு,ரசம்,மோர் போன்றவற்றை எல்லாம் அழகாக நூலை அவிழ்த்து
வைத்திருந்தான் வினய்.
“சரி நீ போய் கைய
கழுவிட்டு வா....
“என்னது நான் கைய
கழுவுனுமா என்ன வெளயாடுரியா......?
“ஆஹா...!!! இது
வேறயா....? சாப்பிடறதுக்கு முன்னாடி கை கழுவுற பழக்கம் லாம் கெடயாத...
“ஹலோவ் இந்த ஈன
வெங்காயம்லாம் எங்களுக்கும் தெரியும்....என் கையால நான் சாப்பிட போறது இல்ல உன்
கையால தான் சாப்பிட போறன்.. ஆமா... நீ தான் எனக்கு ஊட்டி விடப்போற...”
“ஓஹோ அப்படியா..
என்று மிகுந்த இன்பத்துடன் அமர்ந்து சாம்பாரை ஊற்றி பிசைந்து அள்ளி வினய்யின்
தாடையை இடது கையால் பிடித்து கொண்டு ஊட்டினான். பின்னர் வினய்யின் எச்சில் பட்ட
சாதத்தை தன் உதட்டில் வைத்து உறிஞ்சினான் அகஸ்டீன்.
தன் தாய் நல்ல
உடல் நிலையில் இருக்கும் போது அவர் கையால் சாதம் ஊட்டிகொள்ளும் பாசத்தை இப்பொழுது
உணர்ந்தான்.. வினய்.
“என்ன வினய்.? ஏன்
என்னாச்சு..?
“இல்ல அகஸ் நீ இப்ப ஊட்டுன மாதிரித்தான் எங்க
அம்மா ஊட்டுவாங்க அதே பாசம் இப்ப நீ ஊட்டும் போதும் இருக்குடா. ஒருத்தவங்க ஊட்டும்
போதே அவங்க ஒருத்தர் மேல எவ்ளோ பாசம் வச்சுருக்கங்கனு தெரிஞ்சிடும்டா...... நீ
எனக்கு கெடச்சதுக்கு நான் என்ன புண்ணியம் பண்ணணு தெரிலடா என்று சொல்லும் போது
வினய்யின் கண்கள் கலங்கியது”.
“ஹே என்ன வினு
இதுக்குலாம் போயி கண் கலங்குற. நம்ம வாழ்க்கையில இன்னும் கடந்து போக வேண்டிய தூரம்
நெறைய இருக்குடா. என் உயிரோட நீ கலந்துட்டடா இனிமேல் உனக்கு அம்மா பாசம்,அப்பா பாசம்,அக்கா,தங்கச்சி,தம்பி
எல்லா உறவாவும் நானிருப்பண்டா... உனக்கு ஒண்ணுன்னா என்னால தாங்க முடியாதுடா... என்
கண் முன்னாடி இனிமேல் அழாதடா......
“சரி சரி......
இனிமேல் அழ மாட்டன். நீயும் சாப்புடு...
“என் எனக்கு நீ
ஊட்ட மாட்டியா.........?
“நான் தான் கையே
கழுவலையே.?
“இதுலாம் ஒரு
விஷயமா...... வாழ்க்கையில எச்சிலருந்து வேர்வ வரைக்கும் நம்ம ரெண்டு பேருதும்
கலக்க போகுது..... இதுக்குலாம் போய் சுத்தம் பாக்க முடியுமா..... நீ
ஊட்டுடா....!!!! என்று கெஞ்சினான் அகஸ்.
“சரி இருவரேன்
என்று ஓடி போய் கைகளை கழுவிவிட்டு வந்து அவனும் ஊட்ட இவனும் ஊட்ட ஒரே மகிழ்சியும்
நெகிழ்ச்சியுமாக சாப்பிடும் படலம் அரங்கேறியது. ஒரு வழியாக வந்து கட்டிலில் அமர்ந்தனர்
இருவரும்.
“வினய் நான் உண்ட
ஒன்னு கேக்கலாமா.... ?
“என்னாடா
கேளு....... எதாருந்தாலும் நான் கொடுக்க தயாரா இருக்கன்.......“ என்று
நெருங்கினான்...
“அய்ய..... ரொம்ப
வழியிது தொடச்சிக்க எப்ப பாத்தாலும் இதே நெனப்பா நான் அத கேக்கல.... உனக்கு என்ன
எப்பலருந்து புடிச்சுது........
“இதானா.......
உன்ன எப்ப பாத்தானோ அப்பவே உன்ன எனக்கு புடிச்சுடுச்சிடா... அப்பவே முடிவு
பண்ணிட்டான் நீ ஸ்ட்ரைக்ட் ஆ இருந்தாலும் கே வா இருந்தாலும் இனிமேல் நீதான் எனக்கு
எல்லாமும் னு’. ஏன்னு தெரிலடா..... உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் டா....
உன்ன பாத்த நாள்லருந்து உன்ன நெனைக்காத நேரமே இல்ல அகஸ்.....
“அப்படியா.!!!
என்று வியந்த அகஸ்... “அப்ப சரி இப்ப வா வழிக்கு அப்புறம் முந்தாநாள் என் உன் போன
நான் எடுத்ததுக்கு அப்படி பதறுன.....?
ஹோ அதா...... இப்ப
சொல்லுறன்..... என்று தன மொபைலை எடுத்து அவனிடம் நீட்டி நீயே பாரு டா என்று
கொடுத்தான்......
விசையை தட்டி
திரையை நோக்கிய அகஸ்டினின் கண்கள் அகல விரிந்தது. ஏனென்றால் அதில் தெரிந்தது
அகஸ்டினின் முகம்.
“என்னடா என்
போட்டோ ஸ்க்ரீன் சேவரா இருக்கு.....? இத எப்ப எடுத்த...? ஆச்சரியமும்
மகிழ்ச்சியும் பொங்க கேட்டான்.
“அன்னைக்கு நான்
உன்ன பாத்தப்ப போன்ல சிக்னல் கெடைக்காத மாதிரி செர்ச் பண்ணினேன் நாபகம் இருக்கா.?
“ஆமா.....?
“அப்பத்தான் உன்ன
க்ளிக் பண்ணேன் உன் மரமண்டைக்கு அது தெரிய கூடாதுனுதான் அந்த ஆக்டிங். அன்னைக்கு
சாயந்தரமே உன் போட்டோவ பாத்துகிட்டே படில ஏறுனப்பதான் கால் இடறி
சுளுக்காயிட்டுடா.... என்று அவன் கூறும் போது அகஸ்டீன் வினய்யின் மார்பில்
சாய்ந்து கலங்கினான்.
“ஹே என்ன இது
சின்ன புள்ள மாதிரி. இப்ப நான் ஒன்னு கேக்கவா.......?
“கேளுடா..!!!!
“நானும்
காலைலருந்து கேக்குரேன் பதிலே சொல்ல மாட்டற. நீ எப்பதான் இங்க வரப்போற...?
“நாளைக்கு
வந்துடுவண்டா...... நான் பாதர்ட்டலாம் சொல்லிடண்டா....
“அப்படியா.......!!!!
என்று சட்டென்று அகஸ்சின் கன்னத்தை பிடித்து தூக்கி உதட்டை கவ்வி உறிஞ்ச தொடங்கி
விட்டான்......
இதை எதிர்பாக்காத
அகஸ் சட்டென அதிர்ந்து பின் அவனை தழுவ தொடங்கினான்.
சிறிது நேரம் உலகை
மறந்து தித்திக்கும் செவ்வாய் வழியே தேமதுர தேன் பருகினர் இருவரும்...... பின்
மெல்ல விடுவித்து கொண்ட வினய் பேச தொடங்கினான்...
“ம்ம் போதும்
போதும் இப்போதைக்கு இது போதும், இதுக்கு மேல எனக்கு தாங்காது அப்புறம் இங்கயே
எல்லாத்தையும் முடிக்கிற மாதிரி இருக்கும் என்று “ கூறியவனை அகஸ் குழப்பத்துடனும்
ஏமாற்றத்துடனும் பார்த்தான்.
“என்ன
பாக்குற..... நாம் நேத்துத்தான லவ் பண்ண ஆரம்பிச்சுருக்கோம் அதுக்குள்ளே உள்ள
போகவேனாம்டா..... நீ இங்க மொதல்ல ஷிப்ட் ஆகு எந்த பரபரப்பும் இல்லாம எல்லாம்
செய்யலாம், அதுமில்லாம என் மேல உனக்கு இன்னும் முழு நம்பிக்கை வரலன்னு எனக்கு
தெரியும்டா...... எங்க இவன் நம்மள ஏமாத்திடுவானோ ங்குற எண்ணம் உனக்கு இருக்கு அது
முழுசா நீங்குனப்ரம் உன்ன எனக்கு தாடா அது எனக்கு போதும் என்று கூரும்ப்து
நெகிழ்ச்சியில் அவனை கட்டி பிடித்து கொண்டான் அகஸ்டீன்.
பின் இருவரும்
அபப்டியே படுத்து உறங்கினர் கல்லூரி துவங்கிய நாலிலிருந்து இன்றுதான் அவர்கள்
உண்மையான உறக்கம் கொள்கின்றனர். திட்டமிட்டது போல அன்றைய நாளை கழித்து விட்டு
மறுநாள் பாதரிடம் பேசி சம்மதம் வாங்கினான் அகஸ். மற்றவர்களிடம் தினமும் வேலைக்கு
சென்று விட்டு வருவதால் கஷ்ட்டமாக இருப்பதால் நண்பனின் அறையில் தங்க போவதாகவும்
ஞாயிற்று கிழமை ஆனால் கண்டிப்பாக வருவதாக கூறி விடை பெற்றான் காரைக்காலிளிருந்து
மிகவும் சந்தோசமாக புகுந்த வீட்டுக்கு
போகும் அகஸ்டீனுக்கும் அங்கே இவனை எதிர் பார்த்து காத்திருக்கும் வினய்க்கும்
இடையில் அடுத்து ஒரு போராட்டம் நடக்க போவதயோ....... அதற்குண்டான வேலையில் ஹரீஷ்
ஈடுபட தொடங்கிவிட்டான் என்பதோ அவர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.....
காலையிலேயே அகஸ்டீன்
வருவதால் வினய் கல்லூரிக்கு மட்டம் போட்டு விட்டான். பேருந்து நிலையத்தில் வந்து
அகஸ்டீனை அழைத்து கொண்டு சென்றான் வினய். செல்லும் வழியில் புனித சவேரியார் ஆலயம்
தென்பட்டது. அதை பார்த்து அகஸ் பேச தொடங்கினான்.
வினய் இந்த சர்ச்
சூப்பர் சர்ச் டா.. நாம எண் வேண்டுனாலும் நடக்கும்டா....... வேலைக்கு வரப்ப மனசு
கஷ்டமா இருந்தா இங்கதான் வந்து அழுவண்டா மனசு லேசா ஆயிடும் என்றான்......
“அப்பா சாமியாரே
ஒரேடியா சாமி கும்பிடாதிங்க நாடு தாங்காது காலையிலேயே வெயில் வேற மண்டைய பொளக்குது
தாகமா இருக்கு போய் தண்ணி குடிக்கணும் என்று சீண்டினான் வினய். பின்னர் இருவரும்
வீட்டிற்கு சென்றனர்.
வீடிற்கு
சென்றதும் உள்ளறையில் சென்று தண்ணீர் பருகினான் வினய். அப்பொழுது பின்னாலிருந்து
அகஸ்டீன் அணைப்பதை உணர்ந்தான் வினய். கையிலிருந்த தண்ணீர் குவளை பட்டென்று கீழே
விழுந்து சிதறியது..... அப்படியே இருவரும் கட்டி தழுவி காமதேவனின் பிடிக்குள்
சென்று கொண்டு இருந்தனர்.
“ஆஹா..... இந்த மனிதர்கள் காதலை பரிமாறி கொண்டால் உதடுகளின் பாடுதான்
திண்டாட்டம். இன்பத்தில் திளைத்த இருவருக்கும் எச்சில் கூட இனிப்பாக
தோன்றியது.அப்படியே கட்டிலுக்கு வினய்யை தள்ளி கொண்டு வந்து கிடத்தி மேலே
ஊர்ந்தான் அகஸ்டீன். உலகத்தை மறந்து உடைகளை மாறி மாறி களைந்தனர் இருவரும். தன
நாக்கெனும் சாவியால் வினய்யின் உடல் முழுவதும் வருடி சொர்க்கத்தின் வாசலை திறந்து
காட்டினான் அகஸ்டீன். அப்படியே வினய்யின் நீண்டிருந்த ஆண்மையை தன வாயினில் வாங்கி
அவனுக்கு இன்ப லோகத்தை பரிசாக கொடுத்தான். இத்தனை சுகமளிக்கும் தன காதலனை மட்டும்
சும்மா விட்டு விடுவானா வினய். அகஸ்டீன் அவனுக்கு
கொடுத்த இன்பம் அனைத்தையும் இரட்டிப்பாக திருப்பி அளித்தான் நேரம் போவது
கூட தெரியாமல் பதினோரு மணியளவில் துவங்கிய காம களியாட்டத்தை இரண்டு மணியளவில் மூன்றாவது
முறையாக தங்கள் ஆண்மையை கட்டிலுக்கு தாரை வார்த்து ஓய்ந்தனர். பின் காம கழிவுகளை கழுவி காதல் களியாட்டத்தில் ஈடுபட
துவங்கினர்.
“என்ன அகஸ் அடுத்த
ஷிப்ட் போலாமா...?
“ஏற்கனவே மூணு தடவ
முடிஞ்சிட்டு இன்னுமா பத்தலை..... என்று இன்னும் நெருங்கி மடக்கி தலைக்கு அண்டை
கொடுத்திருந்த வினய்யின் திமிறிய புஜத்தில் தலை வைத்து படுத்தான். வினய்யை முதன்
முதலில் பார்த்த பொழுது வீசிய அதே மணம் சற்று வியர்வை வாடை தூக்கலாக வீசியது அதில்
சொக்கி போனான் அகஸ்டீன்
அப்படியே இருவரும்
பேசிகொண்டே தூங்கி போய்விட்டனர்.
காதலும்
கட்டிலுமாக அந்த வாரம் ஓடியது அடுத்த வாரத்தில் வினய்யின் வகுப்பில் அனைவருக்கும்
கொடுக்க பட்ட அசைன்மென்ட் காரணமாக ஹரீஷும் வினய்யும் சற்று நெருங்கி பழகவும்
ஒன்றாக வெளியே செல்லவும் வழி வகுத்தது. தேர்ட் செமஸ்டர் என்பதால் டெக்னிக்கல்
இங்க்லீஷும் ஒரு பாடமாக அமைந்திருந்தது வினய்க்கு ஆனால் இந்த பாடம் அகஸ்டீனுக்கு
அடுத்த பருவத்தில்தான். ஒரு சில தலைப்புகளை கொடுத்து அந்த தலைப்புக்கான கட்டுரைகளை
சொந்தமாக தயாரித்து ஒரு புத்தகமாக அனைவரையும் சமர்பிக்க கோரி இருந்தார் அந்த
விரிவுரையாளர். அதனால் ப்ரொவ்சிங் செண்டர் போவது, டிடிபி செண்டர் போவது என்று
அடுத்த வாரம் முழுவதும் ஹரீஷும் வினய்யும் ஒன்றாக சுற்றி கொண்டிருந்தனர்.
எப்போதும் மாலையில் கல்லூரி முடிந்ததும் அகச்டீனை பெட்ரோல் பங்கில் விட்டு விட்டு
வீட்டில் வந்த்திலிருந்து அகஸ்டீனுக்கு மெசேஜ் அனுப்பிய வண்ணம் இருப்பான் வினய்
மேற்சொன்ன காரணத்தால் கொஞ்சம் வேலையாக இருந்த வினய் இன்று மெசேஜ் அனுப்பாமலே
இருந்தான் மிகுந்த வருத்ததுடன் இருந்த அகஸ்டீன் வீடிற்கு கிளம்பு தருணம் வந்ததும்
தன்னை அழைத்து செல்ல எப்பொழுதும் வரும் வினய் வராதது கண்டு அவனுக்கு போனில்
தொடர்பு கொண்டான்.
ஓரிரு ரிங்
போனதும் எதிர் முனை “ஹலோ” என்றது
“என்ன இது வினய்
குரல் மாதிரி இல்லையே..... ஆனா எங்கயோ கேட்டிருக்கோமே... என்று அவன்
யோசிப்பதற்குள் அந்த குரல் மீண்டும் “ஹலோ அகஸ்டீன் நான் ஹரீஷ் பேசுறன் வினய்
பாத்ரூம் போயிருக்கான் கொஞ்சம் வைட் பண்ணு” என்றது..
“என்னது?
ஹரீஷா..... நீ என்னடா பண்ற இந்த நேரத்துல அங்க.? மிகுந்த அதிர்ச்சியுடனும் பதற்றத்துடனும்
கேட்ட அகஸ்டினின் குரலை கேட்டு தன திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக செயல்பட துவங்குவதை
எண்ணி சிரித்தவாறே பேச தொடங்கினான் ஹரீஷ்.
ஆம் கடந்த
ஒருவாரத்தில் அவர்கள் இருவருக்குள்ளுமிருந்த அன்யோன்யத்தயும் காதலையும் பார்த்து
தன் பாட்சா இவர்களிடம் பலிக்காது என்று உணர்ந்த ஹரீஷ் எடுத்திருக்கிற ஆயுதம்தான் “சந்தேகம்”. அகஸ்டீனுக்கு தன்னை இணைத்து வினய் மேல்
சந்தேகத்தை வரவைத்து அவர்கள் இருவருக்குள்ளும் பிளவு ஏற்படுத்துவதுதான் அவனது
திட்டம்
“இல்ல அகஸ் ஒரு
ப்ராஜக்ட் விஷயமா என்னோட லேப்டாப் வேணும்னு வினய் கேட்டான் அதான் சாயந்திரமே நான்
வந்துட்டேன் ஏன் உன்ட்ட வினய் சொல்லலியா.....தோ... வினய்யே வந்துட்டான் அவன்ட பேசு” என்று வினய்யிடம் கொடுத்தான்......
யார்டா.? அகஸ்சா
என்று கேட்டபடியே பேச துவங்கினான்......
சொல்லுங்க சார்...
என்னத்த
சொல்லணும்..... நீ வருவியா மாட்டியா நான் வைட் பண்ணிடிருக்கன்’.......
ச்ச்ச்சச்ச்ச்ஸ்
மறந்தே போய்டனே..... சரி சரி இன்னும் கொஞ்சம் வேளை இருக்கு நீ ஷேர் ஆட்டோல
வந்துடுடா. வரும்போது டிபன் வாங்கிட்டு வந்துடு.... என்று மருபேச்சிர்க்கு இடம்
இன்றி துண்டித்தான்.
அகஸ்க்கு என்ன
செய்வது என்றே புரிய வில்லை... ஹரீஷோடு தனியாக வினய் இவ்வளவு நேரம் தனியாக இருந்தது
கூட அவனுக்கு பெரிதாக தெரிய வில்லை எந்த பதிலும் எதிர்பார்க்காமல் போனை வைத்தது
தான் அவனை ஆற்றமையின் உச்சிக்கே கொண்டு சென்றது..... கண்ணீர் ஒன்று தான் வரவில்லை
மனதுக்குள் அனேக வலிகளுடன் கேள்விகளையும் சுமந்த படி அவர்களுக்கான உணவை வாங்கிய கொண்டு
வீட்டிற்கு வந்த போது கதவிரண்டும் ஆவென்று திறந்து காணப்பட்டது.
. உள்ளறையில்
ஹரீஷும் வினய்யும் மிக ஆனந்தமாக சிரித்து கொண்டு எதையோ பேசிக்கொண்டு இருந்தனர்.
அதை எரிச்சலுடன் கேட்ட வண்ணம் உள்ளே சென்ற அகஸ்க்கு இன்னும் எரிச்சல்தான்
கிளம்பியது.
“என்னப்பா பண்றீங்க இன்னும்........”? என்று கேட்ட வாறே இன்னொரு அறைக்குள்
சென்று விட்டான்
ஒகே டா எல்லா
வேலையும் முடிஞ்சிட்டு நாளைக்கு பிரின்ட் எடுத்து பைன்ட் பண்ணிட வேண்டியதான் என்று
கூறியவாறே நிமிர்ந்த வினய் அகஸ்சின் குரலை கேட்டு
“ வந்துட்டானா...
சரிடா நீ கெளம்பு நாம நாளைக்கு பாக்கலாம்” என்று வெடுக்கென்று கூறிவிட்டான்
இதைகேட்ட ஹரீஷும் கிளம்பி விட்டான்.
உள்ளறையில் உடை
மாற்றி கொண்டிருந்த அகஸ்சை மிகுந்த எதிர்பார்ப்புடனும் வாஞ்சயுடனும் பின்னாலிருந்த
படியே கட்டி பிடித்து காலையிலிருந்து வியர்வையில் கசங்கி கிடந்த ரோஜா போன்ற அவனது
மேனியின் மெல்லிய வியர்வை மணத்தை உணர தொடங்கினான் வினய் அது கொடுத்த இன்ப
கிறக்கத்தை முழுமையாக அனுபவிக்க விடாமல் வெடுக்கென்று உதறி தள்ளி விட்டு ஒன்றும்
பேசாமல் நகர்ந்து குளியலறைக்குள் சென்று விட்டான் அகஸ்.
இது வினய்க்கு
ஏமாற்றமாகவும் திகைப்பாகவும் இருந்தாலும் ஒருவாறு சமாளித்து உடல் தூய்மையாக
இல்லாததால் இப்படி நடந்து கொண்டிருப்பான் “ குளிச்சுட்டு வரட்டும் அப்பறம்
வெச்சுக்கலாம் கச்சேரிய “ என்று தனக்குள் எண்ணியவாறே கட்டிலில் காத்து கிடந்தவான்
பின்னர் அவன் வந்ததும் சாப்பிட எதுவாக தயார் படுத்தி கொண்டிருந்தான்.
குளித்து விட்டு
தலையை துவட்டிய படியே வெளிய வந்த அகச்டீனை நோக்கி
“ஏன்டா ஒரு மாதிரி
இருக்க” வா சாப்பிடலாம் ரொம்ப பசிக்கிது.
“இல்ல எனக்கு
வேணாம் நான் சாப்டேன்” என்று கூறி விட்டு கட்டிலுக்கு சென்று விட்டான்
ஆனால் உண்மையில்
அவன் முகம் பசியால் வாடி இருப்பதை கண்ட வினய்க்கு இப்பொழுதுதான் புரிந்தது அவன்
கோபமாக இருக்கிறான் என்று.
“ஹோ கோவமா.....இருக்கான் போலயே...... நெனச்சன் அப்பவே என்ன
வேலை இருந்தாலும் நாம் அவன கூப்ட போகாதது தப்புதான்” என்று தனக்குள் நினைத்த வாறே எழுந்து போய்
“சாப்டுட்டு
வந்துட்டீனா அப்புறம் ஏன்டா ரெண்டு பார்சல் வாங்கிட்டு வந்திருக்க....?
............
“கேக்குறது காதுல
விழுதா இல்லையா......?
“ம்ம்ம்ம் உங்க
பிரண்டோட உலகத்தையே மறந்துட்டு உக்காந்து இருந்திங்களே அதான் அவங்களுக்கு
வாங்கிட்டு வர சொல்லுறியோ னு நெனச்சன்.
“இப்ப உனக்கு நான்
கூப்பிட வரலங்குறது கோவமா இல்ல.....? அவனோட சய்ந்தரத்துலருந்து இருந்தது
கோவமா.........?
............
“அப்பனா நீ என்ன
சந்தேகக படுரியாடா......? அதான் அமைதியா இருக்கியா.....?
“ஏன் அப்படியே
பட்டாதான் என்ன தப்பு...?
“என்னது...? இந்த பதிலை சற்றும் எதிர் பாக்காத வினய்க்கு
கோவம் சுர்ரென்று தலைக்கு ஏறியது
“அடுத்தவனோட தப்பு
பண்ணனும்னு நெனச்சான உன்ன இவ்ளோ கட்டாய படுத்தி இங்க தங்கவே சொல்லிருக்க மாட்டண்டா
உன்ன லவ் பண்றனு கூட வெச்சுகிட்டு சந்தோஷ பட்டுருக்க மாட்டன். என்ன நீ
புரிஞ்சிகிட்டது இவ்ளோதானா...... இனிமே என் மூஞ்சில முழிக்காத.... என்று பொரிந்து
தள்ளி விட்டு வெளியே மாடிப்படியில் சென்று அமர்ந்து கொண்டான்.
இதை சற்றும்
எதிர்பாக்காத அகஸ்டீன் நிதானமாக அமைதியாக இருந்தான். இப்பொழுதுதான் அவனுக்கு தன்
அர்த்தமற்ற கோவம் புரிந்தது.
“ச்சே என் நாம
இப்படி கோவபடுறோம். அவன் உண்மையாவே எதோ வேளை தான் பாத்துகிட்டு இருந்தான். இந்த
ஹரீஷ் பய எப்டி வேணாலும் இருக்கட்டும் அதுக்காக என் வினய் மேல எப்டி நான் சந்தேக
பட்டேன். இப்ப என்னடா பண்றது.” என்று தனக்குள் நினைத்த வாறே அவனை சமாதான படுத்தும் நோக்கில் அணுகி அவன்
தொழில் கையை வைத்தான்.
கை வெடுக்கென்று
உதறி தள்ள பட்டது.
“சாரிடா தங்கம்
சும்மா வாய் தவறி சொல்லிடண்ட சத்தியமா நான் உன்ன சந்தேக பாடலடா எதோ கோவத்துல வாய்
தவறி சொல்லிடண்டா
.............
“என்னடா பேச
மாட்டியா...? ஒரு மெசேஜ் அனுப்பல.... கால் பன்னால கூப்பிட வரல.....போதாகொறைக்கு
ஆட்டோல வானு படீர்னு சொல்லிட்டு வெச்சுட்ட.......?. இதுக்குலாம் எனக்கு கோவம்
வராதா.....?
...........
இன்னும் என்னனவோ
பேசி பார்த்தும் வினய் மசிசவில்லை சிறிது நேரம் கழித்து போய் நேராக படுக்கையில்
விழுந்தான். பிரித்து வைக்க பட்ட உணவும், கட்டபட்டிருந்த கவரும் வாயை பிளந்து
கொண்டு கேட்பாரற்று ஹாலில் கிடந்தது. இனி பேசி பயனில்லை காலையில் பார்த்து
கொள்ளலாம் என்று அகஸ்டினும் கனத்த நெஞ்சோடு அதே கட்டிலில் வினய் மீது படாத வாறு
படுத்து கொண்டான். முதல் முறையாக வினய்யின் கோபத்தை உணர்ந்த அகஸ்டீன் அதற்கு பின்
உள்ள அவனது நியாயமும் இவனது அநியாத்தையும் நினைத்து மனம் கலங்கினான் அதோடு
மாலையில் இருந்து வினயிடமிருந்த எந்த தகவலும் இல்லாத ஏக்கம், வேளை பளுவால் ஏற்பட்ட
களைப்பு , பசி எல்லாம் சேர்ந்து அவனது கண்களும் கலங்கியது அவனை அறியாமல் நீர்
தாரையாக ஓடியதால் மூக்கில் நீர் வடிய தொடங்கியது தொடர்ந்த அகஸ்டினின் மூக்கினை
உறிஞ்சும் சத்தம் வினய்க்கு அவன் அழுது கொண்டு இருக்கிறான் என்று உணர்த்தியது.
பின்னர் எழுந்து
சென்று அருகில் மேசை மீது வைக்க பட்டிருந்த ஜாடியை எடுத்துகொண்டு வந்து அக்சடீனின்
அருகில் அமர்ந்தான் வினய்.
“ இப்ப எதுக்கு
ஒழுவுற........? இந்தா தண்ணிய குடி”
........
கீழே விழுந்த
பிள்ளை யாராவது அருகில் இருகிறார்களா என்று பார்த்ததும் தேம்ப ஆரம்பிப்பது போல
வினய்யின் இந்த மிரட்டலான பாச மிகு கேள்வி மேலும் அழ செய்தது குலுங்கி அழ
தொடங்கினான்.
ஹேய் ,,,,,,,,
இப்ப எண் ஆச்சு என் இப்படி அழுற.....? அருகில் அமர்ந்து முகத்தை திருப்பி தோளில்
சாய்த்து கொண்டான்.
பின்னர் ஒரு
வழியாக சமாதானம் ஆகி இனிமேல் சந்தேகம் என்ற வார்த்தையே அவர்களுக்குள் வரக்கொடது
என்று முடிவெடுத்த படியே மகிழ்ச்சியுடன் அந்த இரவுக்கு விடை கொடுத்தனர்.
மறுநாள் கல்லூரி
முடிந்த பிறகு எதேச்சையாக அகஸ்டீன் ஹரீஷை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது அவனோடு
செல்வா என்பவன் எதோ தீவிரமாக பேசிக்கொண்டு சென்றான் இருந்தாலும் அகஸ் கண்டு
கொள்ளமால் வந்து விட்டான். எப்பொழுதும் போல அகஸ்சை பங்க்கில் விட்டு விட்டு
பிரிண்ட் அவுட் எடுத்து பைண்டிங் பண்ணுகிற வேலை இருப்பதாகவும் ஹரீஷோடு செல்ல
போவதாகவும் கூறி விட்டு சென்றான் வினய். எல்லாம் சரியாக தான் போய் கொண்டு
இருந்தது. ஒரு எட்டு மணியளவில் அகஸ்சின் கைபேசி அழைத்தது. எதோ புதிய
எண்!?
“ஹலோ”
“ என்ன ஹீரோ வேலை எல்லாம்
எப்டி போய்கிட்டு இருக்கு?”
“ ம்ம் நீங்க யாருன்னு
தெரிஞ்சிக்கலாமா?” குரல் பரிட்சய பட்ட குரல் தான் ஹரீஷா இருக்குமோ என்று
எண்ணியவாறே தொடர்ந்தான்.
“ஹரீஷா.?”
“ ம் பரவால்லையே கண்டு
பிடிச்சுட்ட.?”
“ அதிருக்கட்டும் நீ எதுக்கு
எனக்கு கால் பண்ண.?
“ ம் சொல்லுறன் அதுக்குதான
கால் பண்ணன். ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல உங்க லவ்வரோட. எல்லாம் கொஞ்ச நாள் தான்
சீக்கிரமா அனுபவிக்க வேண்டியதெல்லாம அனுபவிசுக்க ஏன்னா இன்னும் கொஞ்ச நாள்ல வினய்
எனக்கு சொந்தமாகிடுவான் என்ன ஒன்னும் புரியலையா?” அவன நம்ம காலேஜ்ல சேருரதுக்கு
முன்னாடியே எனக்கு தெரியும்டா. சும்மாலாம் தெரியாது அவனும் “கே”னும் தெரியும் நான்
லைனுக்கு வரதுக்கு முன்னாடியே நீ வந்துட்ட. மரியாதையா நீயே விலகிடு இல்லனா உன்ன
கதற கதற அவன்கிட்டருந்து பிரிச்சு
காரைக்காளுக்கே வெரட்டி விட்டுடுவன். அவன் எனக்குதான் நாபகம் வெச்சுக்க.
பாய்!!”
என்று கூறி விட்டு தொடர்பு
துண்டிக்க பட்டது
அகஸ்சுக்கு தலையே சுத்துவது
போல இருந்தது. ஒருகணம் தன்னை மறந்து நின்றவனுக்கு கையெல்லாம் நடுங்கியது
இருந்தாலும் உடனே சுதாரித்து கொண்டு
வினய்யை தொடர்பு கொண்டான். ஒரு ஐந்து ரிங் போயிருக்கும். அதற்குள் இவனுக்கு ஐம்பது
ரிங் ஆனது போல இருந்தது
“ சொல்லுங்க செல்லம் வேலை
அதுக்குள்ளயா முடிஞ்சிட்டு கூப்ட வரவாடா?”
“ அதுலாம் இல்ல சும்மாதான்
பேசணும் போல இருந்தது. எங்கருக்கடா?
“ பெரிய கடைதெருல நானும்
ஹரீஷும் கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கிரோம்டா.”
“ ஹரீஷ் உன்னோட எவ்ளோ நேரமா
இருக்கண்டா”
“ ஏன்டா அஞ்சு மணிலேருந்து
ஒன்னதான் இருக்கோம்”
“ இப்ப யார்டயாது போன்ல
பேசுனானாடா?
“ இல்லடா அவன் போன கூட என்
பாக்கேட்டுலதான் இருக்கு என்ன விஷயம்டா? வேனும்னா அவன்ட்ட பேசுரியாடா?
இதற்கு மேல் கேட்டால்
வினய்க்கு கோபம் வந்து விடும் சந்தேக படுகிறான் என்று நினைப்பான் என்பதை உணர்ந்தவன்
”இல்லடா சும்மாதான் கேட்டன்
எதோ ராங் கால் வந்துது ஹரீஷ் வாய்ஸ் மாதிரி இருந்தது அதான் ஓகே நான் வெச்சுடுரன்
பத்து மணிக்கு வந்துடு என்று கூறியவாறே தொடர்பை துன்டித்தான்
“என்ன இது ஹரீஷ் அவனோட தான்
இருக்கான் அவன் பேசிருந்தா வினய் சொல்லி இருப்பான். ஒரு வேலை ரெண்டு பெரும் சேந்து
கேம் ஆடுரானுங்களா. ஒரே குழப்பமா இருக்கே.” என்று ஆயிரம் கேள்விகளுடன் அழைக்க வந்த
வினய்யுடன் வீட்டிற்கு சென்றான்.
பதற்றத்துடன் யோசித்து
கொண்டே சென்றவனை மாடி படியருகே இருந்த இருட்டான சூழ்நிலையில் எதிர் பாராத விதமாக
கட்டி அனைத்து ஓரு முத்தமிட்டான் வினய். இதனை சட்டென்று எதிர்பார்க்காத அகஸ்
கையில் வைத்திருந்த கைப்பேசியை தவற விட்டன். அது இருட்டில் தெறித்து எங்கோ சென்று
விழுந்தது. பின்னர் சமாளித்து ஆங்காங்கு சிம் தனியே மின்கலன் தனியே என்று சிதறி
கிடந்த போனை எடுத்து மீண்டும் கோர்த்து உயிர் பொத்தானை அழுத்தினான். துரதிர்ஷ்ட
வசமாக அனைத்து கால் ஹிஸ்டரியும் அழிக்க பட்டு இருந்தது.
“இந்த நம்பர்தாணு’ காட்ட கூட
இப்ப முடியாதே. இப்ப எப்டி அவன்ட அந்த விஷயத்த சொல்லி கேக்க போற” என்று தனக்குள்
நொந்து கொண்டான். வினய்யோ ஜாலியாக விசில் அடித்த படி உடை மாற்றி கொண்டு இருந்தான்/
“சரி இப்ப இந்த விஷயத்த
இப்படியே விட்டுடுவோம் அப்பறம் பேசிக்கலாம்.” அவன்ட்ட இத பத்தி கேட்டு இன்னும்
சந்தேக படுறோம்னு அவன் நெனைச்சு இருக்குற நிம்மதியா என் இழக்கணும் னு ஒரு
முடிவுடன் அருகில் அமர்ந்த வினய் மீது சாய்ந்து கொண்டான். இப்பொழுது அவன் பேச
தொடங்கினான்.
“ அகஸ் நான் நாளைக்கு
காலயிலயே தஞ்சாவூர் போறான்டா”:
“என்னடா திடிர்னு சொல்லவே
இல்ல?”
“இல்ல தங்கம் என் லேப்டாப்
வீட்டுலருக்கு அத வரும்போது மறந்துட்டன் அவசியம் இல்லன்னு அதுக்கு மெனக்கடல இப்ப
தேவை படுத்துள்ள அத போய் எடுத்துகிட்டு சாயந்தரமே வந்துடுரண்டா.
இதுவும் நல்ல விஷயம்தான்
என்று கூறியவாறே அன்றைய இரவை இனபமாக கழித்தனர்.
மறுநாள் காலை ஐந்து
நாற்பதுக்கு கிளம்பும் ட்ரெயினில் வினய்யை அனுப்பி விட்டு அவன் வண்டியிலேயே இவன்
கல்லூரிக்கு சென்று விட்டான். இவர்கள் இருவருக்குள்ளும் ஒரு மிக பெரிய பிரளயத்தை
உருவாக்க போகிற அந்த அறிவிப்பு கல்லூரியின் அனைத்து தகவல் பலகையிலும்
ஓட்டபட்டிருப்பது தெரியாமல் இருவரும் எதிர் எதிர் திசையில் பயணமாகி கொண்டு
இருந்தனர்.
என்ன அறிவிப்பு என்று குழம்ப
வேண்டாம். இன்னுமிரண்டு வாரத்தில் திருச்சி அண்ணா பல்கலை கழக வளாகத்தில் திருச்சி மண்டல பொறியியல் கல்லுரிகளுக்கு இடையில் நடைபெற
இருக்கும் இன்டர் காலேஜ் கல்சுரல்ஸ் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள
மாணவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டிய அறிவிப்புதான் அது.
முதலாமண்டில்யே இது போன்ற போட்டிகளில்
கல்லூரி மூத்த மாணவர்களின் இசைக்குழுவோடு கலந்து கொண்டு இருக்கிறான் அகஸ் இருந்தாலும்,
இப்போழுது வினய்யும் ஏதாவது ஒரு போட்டியில் கலந்து கொண்டு அவனும் திருச்சி வந்தால்
நன்றாக இருக்கும் என்று தோன்றியது.. மதியம் இரண்டு மணியளவில் தான் வீட்டுக்கு
வந்து விட்டதாக மெசேஜ் அனுப்பியிருந்தான் வினய். அதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாக
குழு தலைவர்களில் ஒருவர் மரணம் காரணமாக மூன்று மணியோடு அனைத்து வகுப்புகளும்
முடிந்து விட்டன.
ஒரு அதிர்ச்சியாக
இருக்கட்டுன்று வியான்ய்யிடம் சொல்லாமலேயே வீட்டை நோக்கி பயனாமானான் அகஸ். மாடி
படி அருகில் செல்லும் பொழுது மேலே
“ மல மல மல மல்லே மல்லே மல்லே
மருதமல்லே” என்று சத்தமாக பாடல் ஒலித்தது
எதிர் பார்ப்புடன் உள்ளே
சென்றவனுக்கு இன்ப அதிர்ச்சியாக வினை ஆடி கொண்டு இருப்பது தெரிந்தது, தன்னை மறந்து
ஒரு
துண்டை கையில் வைத்து கொண்டு
லேப்டாப்பில் பாடலை ஒலிக்கவிட்டு ஆடிகொண்டிருந்தான். சிறிது நேரம் அவனது
ஆட்டனாயகனின் ஆட்டத்தை ரசித்த வாறே புன்முறுவலுடன் நின்று கொண்டிருந்தான் அகஸ்.
பாடல் முடிந்ததும்தான்
எதேச்சையாக வினய் அகசை பார்த்து வெட்கத்துடன் அருகில் வந்தான்.
“என்னடா இப்பவே வந்துட்ட?”
“யாரோ செத்துட்டாங்க னு மூணு மனக்கு லாம்
அனுப்பிட்டாங்கடா ஆமா இதென்ன கூத்து டான்ச்லாம் ஜமாய்க்கிற?”
“ சும்மாதாண்டா கடுப்பா இருந்து நானும் காலேஜ்ல டான்ஸ்லாம் ஆடுவண்டா “
என்றவனிடம் திருச்சி போட்டி
பற்றி கூறினான் அகஸ்.
மறுநாள் காலையிலேயே
கால்லூரியில் அவரவர் துறை மாணவர்களுடன் பாட்டு மற்றும் நடனத்திர்க்கான குழுவில்
பெயர் கொடுத்தனர்.
அடுத்த இரண்டு வாரமும்
வகுப்புகளுக்கு மட்டம் அடித்து பயிற்சி மேற்கொண்டனர்.
வினய் குழுவினர் ஆடும்
நடனத்தில் இடையில் ஐந்து நிமிடம் நெருப்பு பந்துகளை கையில் சுழற்றிய படி ஆட
வேண்டிய முறை இடம்பெற்றிருந்தது. கொஞ்சம் பிசகினாலும் மேலே தீபிடிக்கும்
அபாயம்மிகுந்தாக இருந்தது. அகஸ் எவ்வளோவோ சொல்லியும் கேக்காமல் அந்த நடனத்தை
முனைப்புடன் ஆடினான் வினய். இந்த குழுவில்
ஹரீஷுக்கும் இடம் உண்டு.
ஒரு வழியாக பயிற்சி எல்லாம்
முடிந்து போட்டி நாளின் முதல் நாளே அனைத்து மாணவர்களும் தொடர் வண்டியில் திருச்சி
நோக்கி பயணமானார்கள். சீனியர் ஜூனியர். பெண்கள் என்று அனைவரும் இருந்ததால் துறை
வித்தியாசம் இன்றி அந்த பயணம் கல கலப்போடு இருந்ததது.
திருச்சியிலிருந்து புதுகோட்டை செல்லும்
வழியில் எழிலுற யூகலிப்டஸ் மரங்களின் நடுவில் அமைந்திருன்தது அந்த பலகலை கழக
வளாகம். வெளியிலிருந்து வரும் மாணவர்கள் தங்க வேண்டி வளாகத்தில் உள்ள விடுதி
அறைகளையே ஒதுக்கி இருந்தனர் அனைத்து மாணவர்களும் விருப்ப . பட்ட அறையில் விருப்ப
பட்ட நண்பர்களுடன் தங்கினர். ஆனால் நமது நாயகர்கள் மட்டும் ஏனோ தனித்தனியாக தங்கி
இருந்தனர். ஏனென்றே தெரிய வில்லை கிளம்பும் பொழுதிலிருந்தே ஏன் அதற்கு ஒரு நாள்
முன்பிருந்தே வினய் அகச்டீனுடனான நெருக்கத்தை தவிர்த்து வந்தான். தொடர்வண்டி பயனத்தின்
போது கூட பெரும்பாலும் விலகியே இருந்தான். எப்போதும் ஒன்றாகவே இருந்தால் மற்ற
மாணவர்களின் சந்தேகத்திற்கு வழி வகுத்து விடும் என்று தான் இவ்வாறு நடந்து கொள்கிறான்
போலென்று எண்ணி அகஸ்ச அமைதியாக இருந்தது விட்டான். அதற்காக ஒரே அறையில் கூடவா தங்க
கூடாது என்று அவன் மனம் கேக்காமல் இல்லை. மறுநாள் காலை ஏழு மணியளவில் அனைத்து
மாணவர்களும் மொட்டை மாடியில் ஏறி திருச்சி நகரின் அழகை ரசித்து கொண்டு இருந்தனர் சுற்றி
யூகலிப்டஸ் காடாக இருந்ததால் ஆங்கங்கு மயில்கள் நடனமாடி கொண்டு இருந்தன. வெகு
அருகிலேயே மயில்கள் இருப்பது அனைவருக்குமே மிகுந்த வியப்பாக இருந்தது. தொலைவில்
அரங்கனின் விண்ணுயர் கோபுரமும், தாயுமானவனின் தனிநிகர் மலைகோட்டையும் கம்பீரமாக
காட்சி அளித்தது.
பத்து மணி அளவில் இசைகுழுக்களுக்கு
இடயிலான போட்டிகள் நடை பெர இருப்பதால் விரைவாக கிளம்பி அகஸ் வினய் கிளம்பி
விட்டானா என்று பார்க்க ஓடினான். அங்கு அவன் முக்காடிட்டு படுத்து தூங்கி கொண்டு இருந்தான்.
” ஹே என்னடா இன்னும்
துங்குற.” எழுந்து கேளம்புலையா “
“ என்ன அகஸ் டான்ஸ்
காம்படிஷன் சாயந்திரம் தான ஏன் இப்பவே கெளம்பனும்?”
“ ஆனா எனக்கு இப்பதானடா. நீ
வர மாட்டியா பாக்க?”
“ இல்லடா எனக்கு தலைய
வலிக்குது நீ போயட்டு வாடா நான் வரல”
“ என்னடா செய்து அதுக்குதான்
நான் கூட இருக்கண்ணன் வேணாம்னு நீதான்
சொல்லிட்ட நான் வேனா கூட இருந்தது பாத்துகிரண்டா
“ அதுலாம் ஒன்னும் வேணாம் நீ
மொதல்ல போடா” ஹரீஷ் இங்கதான் இருக்கான் அவன் பாத்துப்பான்.”
“ நாம ஒண்ணுமே பண்ணலையே”. என்று மிகுந்த கனத்த
மனதுடன் அங்கிருந்து வெளியேறினான்.
அவர்களுடன் வந்த மாணவர்கள்அதில்
ஹரீஷின் அனைவரும் போட்டி நடக்கும்
அரங்கிற்கு வந்து விட்டனர் ஹரீஷயும் வினையும் தவிர்க்க. இந்த விஷயம் நமக்கே இத்தனை
கேள்விகளை எழுப்புகிறதே.!!
அகஸ்க்கு எப்படி இருக்கும்.? தங்கள் முறை
முடிந்ததும். எதோ விபரீதம் நடக்க போகிறது. அவர்கள் இருவருக்கும் இடையில் எதோ ஒன்று
இருக்கிறது அதான் நம்மள அவாய்ட் பண்றானுங்க. இவ்ளோ பேரு இங்க இருக்கும் போது
அவனுங்களுக்கு மட்டும் அங்க தனியா என்ன வேலை?
அப்பொழுது பலகுரல்
வல்லுனர்களுக்கான நிகழ்ச்சி இருந்ததுடந்து கொண்டு நெருங்கிய நண்பனான செல்வாவும்
பங்கேற்று இருந்தான். இந்த செல்வா ஏற்கனவே ஒரு முறை கதையில் வந்து
சென்றிருக்கிறான் என்பதை வாசகர்கள் நினைவில் கொள்க.
” செல்வா ப்ரோகிராம பாக்க
ஹரீஷ் வரல, நம்மள பாக்க வினய் வரல ஏன் என்ன பண்ணுறானுங்க அவனுங்க? என்று
ஆயிரம் கேள்விகளுடன் யாருக்கும் சொல்லமால் அறை
நோக்கி நடந்தான். தூரத்தில் அவர்கள் தங்கியிருந்த அறை தெரிந்தது அருகில் யாரும்
வருகிறார்களா என்று நோட்டம் விட்ட படி நின்றிருந்த ஹரீஷ் யாரும் இல்லை என்று ஊர்ஜித
படுத்தி கொண்டு உள்ளே சென்று தாழ்ப்பாள் போட்டான். நடையின் வேகமும் இதயத்தின் துடிப்பின்
இன்னும் அதிகரித்தது அகஸ்க்கு.
வேகமாக அறையின் சன்னல் வழி
காதை கொடுத்து கேட்டான். உள்ளே வினய்யும் ஹரீஷும் பேசி கொண்டது கேட்டது.
“வினய் சீக்கிரம் படுடா.யாரவது
வந்துட போறாங்க”
“ஹே இரு இரு பேண்ட்லாம் நானே
கழட்டுரன் நீ கை வைக்காத கூச்சமா இருக்கு>”
சிறிது நேர அமைதிக்கு பின்
மீண்டும் உரையாடல் தொடங்கியது.
“என்ன வினய் இவ்ளோ பெருசா
இருக்கு அகஸ் எப்டிதான் இத தாங்குவானோ.”
“ஏன்டா இப்ப அவன நாபக படுத்துற. இந்த விஷயம் மட்டும்
அவனுக்கு தெரிஞ்சிது நான் தொலைஞ்சேன்”
ச்சச்ச்ச்சச்ச்ச்ஸ் ஆஹா ஹா
ஹா...... மெதுவாடா....... அஹ்ஹ்ஹ வினையின் இந்த முனகும் ஓசையால் இதற்கு மேல்
பொறுமை காக்க முடியாதவனாய் கதவை ஓங்கி ஒரு உதை விட்டான் அகஸ்.
படீரென்று திறந்து கொண்ட
கதவு காட்டிய காட்சி அகஸ்க்கு உயிரே போவது போல இருந்தது
ஆமாம், அங்கு கட்டிலில்
வினய் படுத்திருக்க, அவனது அந்தரங்க பகுதி அருகே ஹரீஷ் எதோ செய்து கொண்டு
இருந்தான். இதை சற்றும் எதிர்பார்க்காத இருவரும் திடுக்கிட்டு எழுந்தனர்.
“ச்சே நீங்கலாம் ஒரு
மனுசனா.......? இப்படி ஏமத்திட்டிங்கலேடா. போதும்டா....... போதும்... நான்
நம்புனதும் போதும் நாசமா போனதும் போதும்”. என்று கத்திய படி பின்னால்
விரிந்திருக்கும் யூகலிப்டஸ் காட்டுக்குள் வேகமாக ஓடினான் அகஸ்.
அதிர்ச்சியிலிருந்து
மீளாதவனாக பின்னாலேயே ஓடினான் வினய்.
தன் திட்டம் நிறைவேறப்போகும்
அந்த நேரம் வந்து விட்டதை நினைத்த ஹரிஷும் அந்த காட்சியை பார்க்க பின்னால்
ஓடினான்.
காட்டுக்குள் சென்ற அகஸ்
என்ன முடிவெடுக்க போகிறான்?, உண்மையில் அந்த அறைக்குள் என்னதான் நடந்தது?,
அப்படியானால் வினய் ஏமாற்றுக்காரனா?, ஹரீஷின் திட்டம் நிறைவேறியதா?. இந்த எல்லா
கேள்விகளுக்கு விடை நிறைவு பகுதியில்!. அதுவரை கத்திருங்கள்.
-தொடரும்
.