பக்கங்கள்

வியாழன், 29 ஜனவரி, 2015

நிரஞ்சன் காலிங்- சிறுகதை

       
           அது ஒரு முன்னிரவு நேரம். மழை இருட்டிகிட்டு கனமா பெய்ய தயாரா தோ தானு மிரட்டிகிட்டு இருந்துது. எனக்கு மனசுல ஒரு அலுப்பு இந்த மழையில நிச்சயம் போயே தீரணுமானு!? ஆனா சரவணனோட அந்த வார்த்தைங்க காதுல கேட்டுகிட்டே இருந்தது. 'இன்னைக்கு நீங்க வரலனா அப்றம் அஞ்சு வருஷம் கழிச்சுதான் என்ன பாக்க முடியும். ஏன்னா நாளைக்கு மதியம் எனக்கு துபாய்க்கு ப்ளைட்'

மழைக்கு பயந்துகிட்டு இப்டி ஒரு பிகர மிஸ் பன்னனுமா? எப்டியாவது போய்ட்டோம்னா பக்கத்துல இருக்குற சித்தி வீட்டுல தங்கிட்டு காலைல வீட்டுக்கு வந்திரலாம்னு முடிவு பண்ணி எங்க ஊர்லருந்து நாப்பது கிமீ தூரம் இருக்குற திருப்பூண்டிக்கு போக வண்டிய ஸ்டார்ட் பன்னிட்டேன். சரவணன் க்காக ஒரு ஸ்பெஷல் குளியல் போட்டு சூப்பரா ட்ரெஸ் பண்ணி டொம்மிபாய் செண்ட் போட்டுருந்த என்ன நெனச்சா எனக்கே ஆசைவர மாதிரி மழைக்கு ஜர்கின் மாட்டி சும்மா கும்முனு கௌம்பியிருந்தேன்.
பைக் கண்ணாடில மொகத்த பாத்தேன் ஒரு அழகன பாக்க போற ஏக்கம் அப்பட்டமா தெரிஞ்சுது.

ரோட்டு ஓரமா ஆங்காங்கே நிக்கிற பிகர்ங்கள சைட் அடிச்சுகிட்டே ஹெட் செட்ல ஏஆர் ரஹ்மான துணைக்கு போட்டுகிட்டு முக்கால்வாசி தூரம் போயிட்டேன். கீழ்வானத்துல மழை கடுமையா இருட்டிகிட்டு பேயுறது தெரிஞ்சுது. ஆனா நான் இருக்குற ஏரியால தோ வர்றேன் தா வர்றேன் னு சீன் போட்டுது வானம்.

திருப்பூண்டிய நெருங்க பத்து கிமீ இருக்கும் போது சரவணனுக்கு கால் பண்ணேன் ரெடியா இருக்க சொல்லாமேன்னு. முதல் ரிங் பதில் சொல்லாமலேயே முடிஞ்சுது. ரெண்டாவது ரிங்குக்கு அலட்சியமா பதில் சொன்னது சரவணன் குரல்

சாரி சுந்தர் நாம இன்னைக்கு பாக்கமுடியாது நீ வராத!

டேய் என்னடா சொல்ற நான் ஏற்கனவே கிளம்பி வந்துட்டேன்டா ப்ளான்ல ஒன்னும் சேஞ் இல்ல கால்லாம் பன்ன வேணாம் நீ நேரா வந்து கால் பன்னு னு சொன்னியே இப்ப என்னடா இப்டி சொல்ற?

அதான் மச்சான் அம்மாவும் அப்பாவும் வௌிய போறேன்னு சொன்னாங்க அதேமாதிரி கௌம்புனவங்க மழையா இருக்குனு திரும்ப வந்துட்டாங்க சோ பாக்கமுடியாது தப்பா எடுத்துக்காத சாரி பய்.

கால் கட் ஆயிட்டு. திரும்ப ஒருதடவ ட்ரைபன்னேன் ஸ்விட்ச் ஆப் னு சொன்னுது.
எவ்ளோதான் நம்புனாலும் சிலர் இப்டி ஏமாத்துறது அரசியல் வாழ்க்கையில சகஜம் தானேன்னு சித்தி வீட்டுக்காவது போவோம்ங்கிற முடிவோட நான் வண்டிய ஸ்டார்ட் பன்னவும் மழை பெய்யவும் கரெக்ட்டா இருந்தது.

 இது வேற சனியன் உயிர வாங்குதுனு நெனச்சிகிட்டே கொஞ்சம் தூரம் தான் போயிருப்பேன், ஒரு தனிப்பட்ட இடத்துல வண்டி பட்டுனு ஆப் ஆயி நின்னுடுச்சி. அதே சமயம் ரோட்ல எரிஞ்சிகிட்டு இருந்த ஸ்ட்ரீட்லைட்ஸும் அனஞ்சு ஏற்கனவே இருந்த மழை இருட்ட மை யிருட்டாக்கிடுச்சு. மணி வேற எட்டரைய தாண்டிடுச்சி. என்ன ஏமாத்துன சரவணனா வண்டிய நெனச்சிகிட்டு ஒதச்சேன். குபுக்குபுக் னு பொகைய தள்ளிட்டு எனக்கு சளி பிடிச்சிருச்சுப்பா என்ன விட்ரு என்றது வண்டி. ஆனா நான் விடுவேனா? வண்டிய விட்டு இறங்குனேன். வண்டிகள் அதிகமா போகாத அந்த ரோட்டுல நான் மட்டும் தொப்பலா நனஞ்சி போய் தனி ஆளா நின்னேன். ஜெர்கின் உள்ள நனையாம இருந்த கர்ச்சிப்ப எடுத்து ஸ்பார்க் பிளக்க தொடச்சி ஊதி மாட்டினேன். ரெண்டொரு உருமலுக்கு பிறகு வண்டி ஸ்டார்ட் ஆயிடுச்சி. ஹெட்லைட் வௌிச்சத்துல மழை சாலை தௌிவா தெரிஞ்சிது. வண்டிய ஒரு வழியா கௌப்பிக்கிட்டு அங்கருந்து நகர்ந்தேன்.

கொஞ்ச தூரத்துல யாரோ ஒருத்தவங்க வண்டிய மறைக்கிற மாதிரி இருந்துது. இங்கருந்து பாக்கும் போதே அது ஒரு டாப் டக்கர் பிகர்னு தெரிஞ்சுடுச்சி. நறுவுசிறுவான உடம்பு அவனுக்கு, அரைக்கை சட்டையும் ஜீன்ஸ் பேண்டும் போட்ருந்தான். கிட்டபோய் நின்னேன்.

கெஞ்சம் திருப்பூண்டில விடுறீங்களா மழையில மாட்டிகிட்டேன்?? என்றான் அவன்.

அடிசக்க கரும்பு தின்ன கூலியா ன்னு நெனச்சிகிட்டு வண்டில ஏத்திகிட்டேன். அவனோட தொடையிடுக்கு என் பின்புறத்த அழுத்துற மாதிரி அப்டி ஒரு நெருக்கமா உக்காந்தான். எனக்கு ஜிவ்வுனு ஏறிடுச்சு. போதாக்கொறைக்கு தோள்மேல வேற கைய வச்சிகிட்டான்.

ஒன்னும் பேசாம கொஞ்ச தூரம் போனோம் மழை இன்னும் வலுத்து முகத்துல அறஞ்சுது. குளிர் தாங்க முடியாம தோள்மேல இருந்த அவன் கை மெல்லமா என் இடுப்புக்கு நழுவி இறுக அணச்சுது. எனக்கு நாடி நரம்பெல்லாம் சூடாகி என் தம்பி முழு விறைப்போட விடைச்சி நின்னான்.

ஏங்க அங்க ஒரு கொட்டா தெரியுதே அங்க யாராது இருப்பாங்களா? நாம கொஞ்ச நேரம் அங்க நிப்போமா வண்டி ஓட்டவே முடில என்றேன் நான்.

ம் போலாங்க என்றவன் உரிமையோடு என் இடுப்ப மேலும் இறுக்கினான்.

அந்த கைவிடபட்ட டீக்கடையில் அவன் இறங்கி உள்ள போனதும் வண்டிய உள்ள தள்ளி போட்டுட்டு அவனை நோக்கி திரும்பும்போது தடுமாறுவதுபோல் தடுமாறி அவன்மேல விழுந்தேன். என்னய தாங்கிபுடிச்சவன் அப்டியே தழுவிகிட்டான்.

அவன் துணியெலல்லாம் நனஞ்சும் ஒரு சூடு அவன் ஒடம்புலருந்து புறப்பட்டுது. அதுமாதிரி ஒரு வாசனைய எங்கயும் நுகர்ந்தது கிடையாது அவன் மேல அப்டி ஒரு வாசன.

முத்தமிட்டோம் கட்டிபிடிச்சோம் அந்த மண் தரையிலையே படுத்து அவன ஒரு வழி பாத்தேன் என்னோட எல்லா இழுப்புக்கும் வளஞ்சி கொடுத்தான். அப்டி ஒரு சுகத்த அனுபவிச்சதே இல்ல அதுவரைக்கும் நான்.

 என்னோடு சூடான கஞ்சிய முழுசா வாயில வாங்கிக்கிட்டான் அவன். அவனுக்கு வரவழைக்க நான் முயற்சி பன்னேன்.
வேணாம் சுந்தர் டைம் ஆயிடுச்சி போகலாம்னு சொன்னான்.

மழை விட்டுருந்தது. வண்டில போகும் போது அவன் பேர் நிரஞ்சன் னு சொன்னான். கரண்ட் வந்து ரோட் லைட்லாம் எரிய துவங்கிடுச்சி

கொஞ்ச தூரம் போனதும் நான் இங்கயே இறங்கிக்கிறேன் ன்னு சொன்னான்.

ஏன் திருப்பூண்டினு சொன்ன?

இல்ல மழையா இருக்கு நான் போற வேல இனிமே நடக்காது நான் இங்கயே இறங்கிக்கிறேன் இப்டியே நடைய கட்டுனா என் வீட்டுக்கு குறுக்கு வழிதான்

என்றவனின் முகம் தெருவிளக்கு வௌிச்சத்துல தௌிவா தெரிஞ்சுது.. ப்பா எவ்ளோ அழகு இன்னொரு ஷிப்ட் போலாமானு கேட்டேன் அவன் சிரிச்சான். அதுவும் அழகுதான்.

மொபைல் நம்பர் கேட்டேன். என்ட்ட போன் இல்ல உங்க நம்பர் சொல்லுங்க நான் காலையில வீட்டு நம்பர்லருந்து போடுறேன்னு சொல்லி என் நம்பர கேட்டு தெரிஞ்சிகிட்டு இருட்டுல நடந்து போயிட்டான்.

நானும் ஒரு வழியா சித்தி வீட்டுக்கு பத்தரை மணிக்கு வந்து சேந்தேன் மழையில நனைஞ்சதுக்கு திட்டு வாங்கிகிட்டே அவங்க சுட்டு கொடுத்த தோசைய தின்னுட்டு நிரஞ்சன நெனச்சிகிட்டே தூங்கிட்டேன்.

மறுநாள் வேலைக்கு போகனுமேன்னு சீக்கிரமா எழுந்து வண்டிய எடுத்துகிட்டு சித்தி வீட்டுலருந்து வௌிய வந்தேன்.

கொஞ்ச தூரத்துலையே பளீர்னு கண்ணுல பட்டுது ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர். பழகிய முகந்தான் அதுல இருந்துது. நிரஞ்சன் னு பேர் கூட பரிட்சயம் தான்.

காலை பனியில கூட எனக்கு வேர்த்து கொட்டுனுது. அந்த ஏரியா ல எங்க பாத்தாலும் நிரஞ்சன் போஸ்டர்தான். வண்டிய நிறுத்திட்டு ஒரு டீக்கடை கிட்ட ஒட்டிருந்த போஸ்டர் கிட்ட போய் பாத்தேன் நிச்சயம் நேத்தி நைட் என்னோட படுத்தவன்தான். ஆனா செத்து மூணு நாள் ஆவுது.
அதிர்ச்சியில் உறஞ்சி போய் நின்ன என் நினைவுகள் டீ வேணுமா தம்பினு டீக்கடைக்காரர் கேட்ட கேள்விலருந்துதான் திரும்புனுது.

அவர் கொடுத்த டீய குடிச்சேன். வண்டிய எடுத்து கொஞ்ச தூரம் போனேன். பாக்கெட்ல போன் அடிச்சுது. எடுத்து பாத்தேன்.
 Niranjan calling..

நிரஞ்சன் இதுவரைக்கும் நான் சேவ் பன்னாத நேம். இப்பதான் யோசிக்கினே் நான் சொல்லாமலே என் பேர அவன் சுந்தர்னு சொன்னத!!
அட்டென்ட் பண்ணி ஹலோன்னு சொன்னேன். அந்த குரல் என்ன சுந்தர் பயந்துட்டியா? பயப்படாத! நான் உன் கூடத்தான் இருக்கேன் னு சொல்றதுக்கும் நான் எதிரே வந்த லாரில வண்டிய விடுறதுக்கும் கரெக்டா இருந்துச்சி.

இப்பலாம் நானும் நிரஞ்சனும் சேந்துதான் பைக்ல வரவனுங்கள மறைக்கிறோம்
ஆமா நீங்க எப்ப அந்த வழியா பைக்ல வருவீங்க??

நிறைந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அன்பு நண்பர்களே.....

கதைகளை படித்து தங்களது மேலான கருத்துக்களை பதிந்து ஊக்க படுத்துங்கள்... உங்களது விமர்சனம் மற்றும் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்... உங்காளது கருத்துக்களை orinakathal@gmail.com என்ற முகவரிக்கு குறைந்த பச்சம் மின்னஞ்சல் செய்யுங்கள்.. அன்புடன் ராஜ்குட்டி காதலன்..